உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
திருப்பத்தூரில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:
தொழிலாளர் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு காந்திசிலை அருகில் இருந்து தொடங்கியது.
மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு மாநிலத் துணைச் செயலாளர் சுப்பிரமணி என்கின்ற புல்லட் மணி தலைமை வகித்தார்.
மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை ஏ. நல்லதம்பி எம்எல்ஏ, திமுக நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், தொடங்கி வைத்து பேசினர்.
மோட்டார் சைக்கிள் ஊர்வலம் கிருஷ்ணகிரி மெயின் ரோடு வாணியம்பாடி மெயின் ரோடு வழியாக சென்று தூய நெஞ்சக் கல்லூரி அருகே முடிவடைந்தது.