உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தாலுகா நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா சின்னையன், ஊராட்சி மன்ற துணை தலைவர் துரைராஜ், தலைமை ஆசிரியர் ஜாசி முத்துக்குமார், மக்கள் பிரதிநிதிகள் இளயகுமார், மைனாவதி, ராஜா ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.