உள்ளூர் செய்திகள்
சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி மிரட்டி பாலியல் உறவு- வாலிபர் கைது
அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில், ஆகாஷ் என்பவரும் சிறுமியும் சுமார் 2 வருடங்களாக சமூக வலைதளத்தில் நண்பர்களாக பழகி வந்தது தெரிந்தது.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஆகாஷ் (வயது23). இவர் சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம், செல்போனில் சிறுமியின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்துள்ளதாகவும், தன்னுடன் வெளியே வரவில்லை என்றால் அதை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி சிறுமியை பலமுறை வெளியில் அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில், ஆகாஷ் என்பவரும் சிறுமியும் சுமார் 2 வருடங்களாக சமூக வலைதளத்தில் நண்பர்களாக பழகி வந்தது தெரிந்தது.
கடந்த ஜனவரி மாதம் ஆகாஷ், சிறுமிக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது செல்போனில் உள்ளதாகவும், தன்னுடன் வெளியில் வந்தால் விட்டுவிடுவேன் இல்லையேல் இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், சிறுமியை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஆகாசை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில், அடைக்கப்பட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஆகாஷ் (வயது23). இவர் சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம், செல்போனில் சிறுமியின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்துள்ளதாகவும், தன்னுடன் வெளியே வரவில்லை என்றால் அதை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி சிறுமியை பலமுறை வெளியில் அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில், ஆகாஷ் என்பவரும் சிறுமியும் சுமார் 2 வருடங்களாக சமூக வலைதளத்தில் நண்பர்களாக பழகி வந்தது தெரிந்தது.
கடந்த ஜனவரி மாதம் ஆகாஷ், சிறுமிக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது செல்போனில் உள்ளதாகவும், தன்னுடன் வெளியில் வந்தால் விட்டுவிடுவேன் இல்லையேல் இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், சிறுமியை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஆகாசை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில், அடைக்கப்பட்டார்.