உள்ளூர் செய்திகள்
செல்போன் பறிப்பு (கோப்பு படம்)

அன்னூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு

Published On 2022-04-16 10:02 GMT   |   Update On 2022-04-16 10:02 GMT
செல்போன் பறிப்பு வழக்கில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ராணி(35).

இந்நிலையில் ராணியின் தந்தைக்கு உடல்நலக்குறைவால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை சென்று பார்த்து விட்டு மீண்டு வீடு திரும்புவதற்காக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூவர் ராணியின் விலையுயர்ந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் சென்ற பொதுமக்கள் மூவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சுபாஷ்(25). இவர் தற்போது கோவை ராமநாதபுரம் பகுதியில் தங்கியுள்ளார். இவர் மற்றும் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது சிறுவர்களை கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும்,சுபாஷினை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

செல்போன் வழிப்பறி வழக்கில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News