உள்ளூர் செய்திகள்
அமராவதி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
அமராவதி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை திருமலைநாதன்பட்டியில் பொன்கலை அறக்கட்டளையால் ஸ்ரீஅமராவதி கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் ஆடிட்டர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் பொன்கலை அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு, இந்த கல்லூரியில் படித்து வளாக தேர்வின் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும்,
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாவட்ட , மாநில, தேசிய அளவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, வாழ்க்கையில் சிறந்த முறையில் வெற்றி பெற கல்வியின் அவசியம் குறித்து தன்னம்பிக்கை கருத்துக்களை எடுத்துக்கூறி சிறப்புரை யாற்றினார் .
இதனை தொடர்ந்து மாணவ, மாணவி-களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்து. நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் சுற்று பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.