உள்ளூர் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-04-13 10:28 GMT   |   Update On 2022-04-13 10:28 GMT
அம்மாபேட்டையில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
மெலட்டூர்:

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

ஒன்றிய செயலாளர் காந்திமதி, பொருளாளர் கண்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் கருணாநிதி, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகையன் 

ஆகியோர் கருத்துரை வழங்கி பேசினர். போரட்டத்தில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் இறுதியில் தமிழ்நாடு சத்-து-ணவு ஊழியர்கள் சங்கத்--தின் சார்பில் பல்வேறு
 
கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர். இறுதியில் ராணி நன்றி கூறினார். 

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியா--ளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டன
Tags:    

Similar News