உள்ளூர் செய்திகள்
உணவுத்துறை அதிகாரி மாரியப்பன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோர் கடைக்கு சீல் வைத்த காட்சி.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’வைப்பு

Published On 2022-04-07 10:05 GMT   |   Update On 2022-04-07 10:23 GMT
ஆழ்வார்திருநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்ட உணவுத்துறை அதிகாரி டாக்டர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோர் உத்தரவின்படி ஆழ்வார்திருநகரி உணவுத்துறை அதிகாரி மாரியப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஆழ்வார்திருநகரி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

ஏற்கனவே இந்த கடையில் பலமுறை புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்ட நிலையில் அதிகாரிகள் எச்சரித்தும் மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடைக்கு உணவுத்துறை அதிகாரி மாரியப்பன் சீல் வைத்தார்.
Tags:    

Similar News