உள்ளூர் செய்திகள்
பொன்னேரி ஜெயிலில் நீதிபதி ஆய்வு

பொன்னேரி ஜெயிலில் நீதிபதி திடீர் ஆய்வு

Published On 2022-03-27 10:08 GMT   |   Update On 2022-03-27 10:08 GMT
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1,2, ஆகிய நீதிமன்றங்களில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வசுந்தரி ஆய்வு செய்தார்.

பொன்னேரி:

பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், மாவட்ட சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1,2, ஆகிய நீதிமன்றங்களில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வசுந்தரி ஆய்வு செய்தார்.

அப்போது ஆண்டறிக்கை, லோக் அதாலத் மூலம் தீர்வு, விபத்து வழக்கு, உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். திடீரென பொன்னேரி கிளைச் சிறையில் ஆய்வு செய்தார். அவர் கைதிகளிடம் உணவு, அடிப்படை வசதிகள் இலவச சட்ட ஆலோசனை உதவிகள் குறித்து கேட்டறிந்தார். பொன்னேரி சிறைத்துறை அதிகாரி சுயம்புலிங்கம் உடன் இருந்தார்.

Tags:    

Similar News