உள்ளூர் செய்திகள்
பள்ளி செல்லாத நரிக்குறவ மாணவன் பதினோராம் வகுப்பில் சேர்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் பள்ளி செல்லாத நரிக்குறவ மாணவன் பதினோராம் வகுப்பில் சேர்ப்பு

Published On 2022-01-29 12:07 GMT   |   Update On 2022-01-29 12:07 GMT
வல்லம் அருகே 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் பள்ளி செல்லாத நரிக்குறவ மாணவன் மேல்சித்தாமூர் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
வல்லம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிதாஸ் முன்னிலையில் வல்லம் ஒன்றியம் களையூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் பள்ளிக்கு செல்லாத நரிக்குறவ மாணவன் மாதவன் மேல்சித்தாமூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு சேர்க்கப்பட்டான்.

உடன் பள்ளி துணை ஆய்வாளர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் வல்லம் ஆசிரியர்கள்,பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி,வல்லம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் நெடுஞ்செழியன்,மேல்சித்தாமூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன்,இடைநிலை ஆசிரியர் ஆல்பர்ட் ஆரோக்கியராஜ்,உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News