உள்ளூர் செய்திகள்
கம்பைநல்லூர் அருகே கோவில் உண்டியலில் திருடிய மாணவர் கைது
கம்பைநல்லூர் அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அடுத்த சொர்ணம்பட்டியில், ஆஞ்ச நேயர் கோவில் உள்ளது. கடந்த 25-ந் தேதி அதிகாலை, கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்தனர்.
அப்போது, கடப்பாரை மற்றும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு வாலிபர் ஒருவர் தப்பியோடினர்.
இது குறித்து ஊர் பிரமுகர் மாதப்பன் என்பவர் அளித்த புகாரின்படி, கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் உண்டியலில் பணம் திருடியதாக கே.ஈச்சம்பாடியை சேர்ந்த பிரவீன் (வயது 19) என்ற வாலிபரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று பிரவீனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 1,950 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைதான பிரவீன் கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாமாண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.