உள்ளூர் செய்திகள்
தூய மரியன்னை ஆலயத்திற்கு தானமாக நிலம் வழங்கும் நிகழ்ச்சி
முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்திற்கு தானமாக நிலம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் 5 சென்ட் நிலத்தை முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயத்திற்கு உட்பட்ட பகுதியில் சொந்த வீடு இல்லாத ஏழை குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி விஜய்வசந்த் எம்.பி தலைமையில் பங்குதந்தை டொமினிக் கடாட்சம்தாஸ் அவர்கள் முன்னிலையில் ஆலயத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில நிர்வாகிகள் ஆஸ்கர் பிரடி, பால்ராஜ், ரமேஷ்குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஐஜிபி.லாரன்ஸ்,
மாவட்ட நிர்வாகிகள் ராஜரெத்தினம், ஜாண்சேவியர், ஜோண்ஸ், இம்மானுவேல், வட்டார நிர்வாகிகள் ஜாண்கிறிஸ்டோபர், ஜாண் பெலிக்ஸ், நகர தலைவர்கள் ஜாண்வெர்ஜின், ஹனுகுமார், சுஜிர் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.