உள்ளூர் செய்திகள்
மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தாய் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
மணப்பாறை மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தாயிடம் போலீசார் விசாரணை
திருச்சி :
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு துண்டை விரித்து அதில் வைத்து விட்டு குழந்தையின் தாய் சென்று விட்டார். இதனை பார்த்த கட்டடி பணியில் இருந்த தொழிலாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு, முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்நிலையில் மணப்பாறையை அடுத்த அம்மாசத்திரம் புதூரைச் சேர்ந்த தனலெட்சுமி (வயது 25) என்ற பெண் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து குழந்தை தன்னுடையது என்று கூறினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3&வதாக கர்ப்பமானேன். பிரசவத்திற்காக கடந்த 18&ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு பெண் குழந்தை பிறந்தது.
3 வதும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் தமிழரசன் திட்டினார். இதனால் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் சென்றேன். ஆனால் மனம் ஏற்க மறுத்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது வைத்த இடத்தில் குழந்தை இல்லாமல் இருந்ததால் மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் இன்று காலை நாளிதழ்களில் வெளியான செய்தியை பார்த்து விட்டு மனம் பதறிப் போய் ஓடிவந்தேன் என்று கூறினார். பின்னர் தனலெட்சுமியை போலீசார் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு துண்டை விரித்து அதில் வைத்து விட்டு குழந்தையின் தாய் சென்று விட்டார். இதனை பார்த்த கட்டடி பணியில் இருந்த தொழிலாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு, முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்நிலையில் மணப்பாறையை அடுத்த அம்மாசத்திரம் புதூரைச் சேர்ந்த தனலெட்சுமி (வயது 25) என்ற பெண் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து குழந்தை தன்னுடையது என்று கூறினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3&வதாக கர்ப்பமானேன். பிரசவத்திற்காக கடந்த 18&ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு பெண் குழந்தை பிறந்தது.
3 வதும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் தமிழரசன் திட்டினார். இதனால் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் சென்றேன். ஆனால் மனம் ஏற்க மறுத்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது வைத்த இடத்தில் குழந்தை இல்லாமல் இருந்ததால் மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் இன்று காலை நாளிதழ்களில் வெளியான செய்தியை பார்த்து விட்டு மனம் பதறிப் போய் ஓடிவந்தேன் என்று கூறினார். பின்னர் தனலெட்சுமியை போலீசார் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.