உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் ரெயில் மோதி 2 பேர் பலி

Published On 2022-01-24 08:44 GMT   |   Update On 2022-01-24 08:44 GMT
ரெயில் மோதி 2 பேர் இறந்தனர்.
கோவை:

கோவை இருகூர்-பீளமேடு ரெயில் நிலையம் அருகே டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேட்டுப்பாளையம்- கோவை  ரெயில்வே தண்டவாளம்  துடியலூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது கையில் பச்சை குத்தப்பட்டு இருத்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News