உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 3 பேருக்கு கொரோனா

Published On 2022-01-22 11:08 GMT   |   Update On 2022-01-22 11:08 GMT
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் பகுதியில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு உள்பட 3  பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இது பற்றி நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இப்போது மீண்டும் 2-வது முறையாக போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸ் நிலையத்தில் சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News