உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

ஆறுமுகநேரியில் சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது

Published On 2022-01-22 10:09 GMT   |   Update On 2022-01-22 10:09 GMT
ஆறுமுகநேரியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் ரோந்து சென்றனர். 

அப்போது ஆறுமுகநேரி- திருச்செந்தூர் சாலையில் சீனம் தோப்பு விலக்கு அருகே நின்றிருந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். 

விசாரணையில் அவர் ஆறுமுகநேரி கீழ சண்முகபுரதைச் சேர்ந்த மணிகண்டன் (42) என்பதும், அவர் அரசு முத்திரையுடன் கூடிய மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்று கொண்டு இருந்ததும் தெரியவந்தது. 

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News