உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலிபர் மீது தாக்குதல்

Published On 2022-01-21 09:14 GMT   |   Update On 2022-01-21 09:14 GMT
திருவாரூரில் வாலிபரை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர்:

திருவாரூர் வண்டிக்காரத் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). சம்பவத்தன்று இவர் திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு புளியந்தோப்பில் நின்று கொண்டிருந்தார். 

அந்த வழியாக திருவாரூர் கடாரங்கொண்டானை சேர்ந்த அஜித்குமார் (19), புலிவலம் ஆகாஷ் (20), திருவாரூர் ராஜ்குமார்ஆகிய மூவரும் வந்தனர்.

அப்போது சக்திவேல் மற்றும் அஜித்குமார் தரப்புக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அஜித்குமார், ராஜ்குமார் , ஆகாஷ் 
ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் சக்திவேலை தாக்கினர். 

இதில் காயமடைந்த சக்திவேல் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார் , ஆகாஷ் ஆகிய 
2 பேரையும் கைது செய்தார். ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News