உள்ளூர் செய்திகள்
புளுதியூர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
தருமபுரி மாவட்டம் புளுதியூர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடந்து வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்ச சந்தையில் கால்நடை விற்பனை அதிகமாக நடைபெறும்.
மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்பட கால்நடைகளை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு ரூ.16, 500 முதல் ரூ.47 ஆயிரம் வரையும் ஆடு ரூ.4500 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.