உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

நாகர்கோவில் அருகே வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-20 08:08 GMT   |   Update On 2022-01-20 08:08 GMT
நாகர்கோவில் அருகே வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகர்கோவில்:

தக்கலை அருகே சேவியர்புரம் பகுதியில் 30 வயது மதிக்கதக்க வடமாநில வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். 

அந்த வழியாக சென்ற  வாலிபர் ஒருவர் இதனைக் கண்டதும்  தக்கலை போலீஸ்  நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்பது குறித்து  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News