உள்ளூர் செய்திகள்
சேலத்தில் மாயமான முதியவர் மீட்கப்பட்டார்
அன்னதானப்பட்டி:
நேற்று சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் பெரியசாமியை பார்த்த அப்பகுதி மக்கள் சுப்ரமணி வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுப்ரமணி அங்கு சென்று தனது தந்தை பெரியசாமியை மீட்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மனம் போன போக்கில் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 85). சம்பவத்தன்று ஒரு வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே சென்ற பெரியசாமி திடீரென மாயமாகி விட்டார்.
இது குறித்து அவரது மகன் சுப்ரமணி நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மாயமான பெரியசாமியை தேடி வந்தனர்.
நேற்று சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் பெரியசாமியை பார்த்த அப்பகுதி மக்கள் சுப்ரமணி வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுப்ரமணி அங்கு சென்று தனது தந்தை பெரியசாமியை மீட்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மனம் போன போக்கில் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.