உள்ளூர் செய்திகள்
திருப்பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்த காட்சி.

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் திருப்பணி

Published On 2022-01-18 06:53 GMT   |   Update On 2022-01-18 06:53 GMT
தூத்துக்குடி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலை சுற்றிலும் கல் தூண்கள் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் சுமார் ரூ.4 கோடி திட்ட மதிப்பில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகரில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலை சுற்றிலும் கல் தூண்கள் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் சுமார் ரூ.4கோடி திட்டமதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, கோவில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News