உள்ளூர் செய்திகள்
மதுபாட்டில்கள்

கோவையில் மளிகை கடையில் மதுவிற்ற வாலிபர் கைது

Published On 2022-01-09 06:47 GMT   |   Update On 2022-01-09 06:47 GMT
அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது
அன்னூர்:

கோவையில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாராவது பதுக்கி வைத்து மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட கடையில் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்பட்டது உறுதியானது. 

இதையடுத்து போலீசார் கடையில் இருந்து 75 குவார்ட்டர் பாட்டில்கள், 37 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து  கடையில் பதுக்கி மதுபாட்டில்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் மனோகரன்(40) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News