உள்ளூர் செய்திகள்
சந்திரசேகர் சமந்தன்

தனுஷ்கோடி அருகே இலங்கை வாலிபர் கைது

Published On 2022-01-07 07:02 GMT   |   Update On 2022-01-07 07:02 GMT
தனுஷ்கோடி அருகே இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடலோர பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சத்திரம் சோதனை சாவடி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை தனுஷ்கோடி ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்அவர் இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் சமந்தன் (வயது 24) என தெரியவந்தது.

இவர் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து அதன் பின்னர் ஒசூர் சென்று அங்கு ஒரு நிறுவனத்தல் வேலை பார்த்துள்ளார்.

வேலை பார்த்த இடத்தில் தனது பாஸ்போர்ட் மற்றும் பணம் ரூபாய் 60 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் தொலைந்து விட்டதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்திலிருந்து இலங்கை செல்வதற்காக ராமேஸ்வரம் வந்து இலங்கை செல்ல முயன்றதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News