உள்ளூர் செய்திகள்
கொள்ளை

விருதுநகரில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 21 பவுன் நகை அபேஸ்

Published On 2021-12-26 09:56 GMT   |   Update On 2021-12-26 09:56 GMT
விருதுநகரில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 21 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மீட்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணவல்லி தாயார் (வயது 73). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது மகள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வசித்து வருகிறார். அவரது நகைகள் கல்யாண வல்லி தாயார் பாதுகாப்பில் இருந்துள்ளது.

சம்பவத்தன்று மகள் விருதுநகர் சூலக்கரையில் இருந்து போன் செய்துள்ளார். அவர் கேட்டதால் வீட்டில் இருந்த 21½ பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு கல்யாணவல்லி தாயார் புறப்பட்டுள்ளார்.

அவரை உறவினர் சுதர்சன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அதன் பிறகு தாதம்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி கல்யாணவல்லி தாயார் சூலக்கரையில் இறங்கி உள்ளார்.

அப்போது அவர் தனது கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த 21½ பவுன் நகைகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சூலக்கரை போலீசில் கல்யாணவல்லி தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News