உள்ளூர் செய்திகள்
திருவாய்மொழி திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை:
உடுமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் வருகிற 2-ந்தேதி முதல் 23-ந்தேதி நடக்கிறது. அன்று முதல் 12-ந்தேதி வரை பகல் பத்து உற்சவமும், 13-ந்தேதி ராப்பத்து திருவாய்மொழி திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
தற்போது மார்கழி மாதத்தையொட்டி ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் பஜனை, பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. பெரியகடை வீதி பி.வி கோவில் வீதி, தளி ரோடு, வடக்கு மட வீதி வழியாக பஜனை நடைபெற்று வருகிறது.