உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

Published On 2021-12-22 07:45 GMT   |   Update On 2021-12-22 07:45 GMT
போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தீஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
உடுமலை:

உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி சாலையில் வெனசுபட்டி பிரிவில் செல்லும் போது சந்தேகப்படும்படி நின்ற பெண்ணை பிடித்து விசாரித்தார். 

விசாரணையில் அவர் முக்கோணம் பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரி ( வயது 42 ) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
Tags:    

Similar News