உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் கலெக்டர் ஆய்வு
கலெக்டர் வினீத் , நகராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் முடிவடைந்த நலத்திட்டப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் நகராட்சி பகுதிகளில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி அலுவலகம் வந்த மாவட்ட கலெக்டர் வினீத் , நகராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் மற்றும் முடிவடைந்த நலத்திட்டப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் முத்தூர்சாலை, புதிய பேருந்து நிலையம், நடேசன் நகரில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பணிகள் முடிவடைந்த புதிய தார்ச்சாலை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ள வெள்ளக்கோவில் அறிஞர்அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் ஆர்.மோகன்குமார் உடனிருந்தார்.