உள்ளூர் செய்திகள்
கைது

வண்ணாரப்பேட்டை- வானகரத்தில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது

Published On 2021-12-06 09:50 GMT   |   Update On 2021-12-06 09:50 GMT
வண்ணாரப்பேட்டை- வானகரத்தில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை. கிழக்கு கல்லறை சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சேரா என்கிற ராஜசேரன், வனிதா, சங்கீதா, ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மேலும் 2பேரை தேடிவருகிறார்கள்.

வானகரம் அடுத்த தண்டலம் பகுதியில் மொபட்டில் கஞ்சா கடத்தி வந்த அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார், அசோக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிரைவராக வேலைபார்த்து வரும் இருவதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

Tags:    

Similar News