உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது

Published On 2021-12-06 08:47 GMT   |   Update On 2021-12-06 08:47 GMT
ஆட்டையாம்பாளையம் நால்ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பெண் வக்கீல் இந்துமதி(வயது36). கடந்த ஆகஸ்ட் மாதம் அவினாசி கோர்ட்டில் இருந்து ஸ்கூட்டரில் அனுப்பர்பாளையம் சென்றுகொண்டிருந்தார்.

அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இந்துமதி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது நிலைதடுமாறி இந்துமதி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த மூவரும் மோட்டார் சைக்கிளில் மாயமானார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஆட்டையாம்பாளையம் நால்ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தனர்.

இந்நிலையில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டதில் அவர்கள் 3பேரும்  நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த முரளி (24), ராஜ்குமார்(22), இளங்கோ(27) என்பதும் பெண் வக்கீலிடம் செயின்பறிக்க முயன்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து முரளி மற்றும் ராஜ்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய இளங்கோவை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News