உள்ளூர் செய்திகள்
கணவனை பிரிந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய எலக்ட்ரீசியன் கைது
இவர் அவ்வபோது குடித்துவிட்டு வந்து சங்கீதாவை கேலி கிண்டல் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது26) பனியன் தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே எலக்ட்ரீசியன் ஜெகநாதன் வசித்து வருகிறார். இவர் அவ்வபோது குடித்துவிட்டு வந்து சங்கீதாவை கேலி கிண்டல் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் அடிக்கடி சங்கீதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தி வந்தார். இந்நிலையில் மதுபோதையில் சங்கீதா வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெகநாதனை வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.