செய்திகள்
தென்காசி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசியை அடுத்த அச்சன்புதூர் அருகே உள்ள கந்தசாமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகள் கோமு துரைச்சி (வயது20). இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அச்சம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசியை அடுத்த அச்சன்புதூர் அருகே உள்ள கந்தசாமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகள் கோமு துரைச்சி (வயது20). இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அச்சம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.