செய்திகள்
வெள்ளகோவிலில் ரூ.49 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
119 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 253 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இந்த விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இதில் 119 விவசாயிகள் கலந்து கொண்டு 57ஆயிரத்து 253 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.102.05-க்கும், குறைந்தபட்சம் ரூ.71-க்கும் கொள்முதல் செய்தனர்.
மொத்தம் ரூ.49 லட்சத்து 80 ஆயிரத்து 575-க்கு வணிகம் நடைபெற்றது.