செய்திகள்
4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது
சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
நாளையில் இருந்து சென்னையில் படிப்படியாக மழை குறையும் என அறிவித்துள்ளது.
சென்னையில் தற்போது சில இடங்களில் மழை நின்றுவிட்டது. காற்று வேகமாக வீசி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் காற்று எவ்வாறு வீசுகிறது என்பதை பார்ப்பதற்காக பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.