செய்திகள்
கோப்புபடம்

குன்னத்தூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-11-11 07:11 GMT   |   Update On 2021-11-11 07:11 GMT
தண்ணீர்பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
குன்னத்தூர்:

குன்னத்தூர் ,16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 12-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதன் காரணமாக குன்னத்தூர் தாளபதி, காவுத்தம்பாளையம், வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், 16 வேலம்பாளையம், செட்டிகுட்டை, குறிச்சி எடையபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News