செய்திகள்
பட்டாசு வெடிப்பு

தீபாவளி கொண்டாட்டம்- பட்டாசு வெடித்த 5 குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம்

Published On 2021-11-05 05:55 GMT   |   Update On 2021-11-05 05:55 GMT
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசு விபத்து குறைந்துள்ளது. 3 பேருக்கு முகத்தில் லேசான காயமும், ஒரு சிலருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசு முக்கிய அங்கமாக இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வது உண்டு.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும்போது தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம்.

தீக்காயத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின்போது சென்னையில் 15 பேர் தீக்காயம் அடைந்தனர். இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவார்கள். கை, கால், முகம் போன்றவற்றில் லேசான காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்திமலர் கூறியதாவது:-

நேற்று இரவு வரை 15 பேர் தீக்காயம் அடைந்து அனுமதிக்கப்பட்டனர். இதில் புறநோயாளிகளாக 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 4 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசு விபத்து குறைந்துள்ளது. 3 பேருக்கு முகத்தில் லேசான காயமும், ஒரு சிலருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News