செய்திகள்
பாலக்கோடு அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
பாலக்கோடு அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது25). கூலித்தொழிலாளி. சிக்கார்தனஅள்ளியை சேர்ந்தவர் அன்பரசன் (21) இவர் ஒரு பெண்ணை கேலி, கிண்டல் செய்தார். இதை சதீஷ் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அன்பரசன் சதீசை கடுமையாக தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் பலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர்.