செய்திகள்
கோப்புப்படம்

கீழக்கரை அருகே இளம்பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு

Published On 2021-10-20 11:22 GMT   |   Update On 2021-10-20 11:22 GMT
கீழக்கரை அருகே இளம்பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை:

கீழக்கரை தாலுகா பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் மனைவி பாண்டியம்மாள் (வயது 27).

இவர் சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு பின்னர் ஆஸ்பத்திரி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டிணத்திற்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

பின்னர் பெரியபட்டிணத்தில் இறங்கிய பாண்டியம்மாள் தெற்கு புதுக்குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜலால் சங்கு கம்பெனி அருகே அடையாளம் தெரியாத பேண்ட் சட்டை அணிந்திருந்த மர்மநபர் பாண்டியம்மாளை கழுத்தைபிடித்து கீழே தள்ளி அவர் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயின் மற்றும் 1½ பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினான்.

இதுகுறித்து திருப்புல்லாணி போலீசில் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News