செய்திகள்
குடிபோதையில் கோடாரியால் சாமி சிலையை உடைத்த தொழிலாளி கைது
கோவை சிங்காநல்லூர் அருகே குடிபோதையில் கோடாரியால் சாமி சிலையை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தேவேந்திரன் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் கோவிலில் இருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகுநாதன் (வயது 23) என்பவர் கோடாரியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை உடைத்தார். இதனை பார்த்த பூசாரி தடுக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் பூசாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து பூசாரி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
சிலையை உடைத்துக் கொண்டு இருந்த ரகுநாதனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தேவேந்திரன் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார்.
சம்பவத்தன்று இவர் கோவிலில் இருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகுநாதன் (வயது 23) என்பவர் கோடாரியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை உடைத்தார். இதனை பார்த்த பூசாரி தடுக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் பூசாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து பூசாரி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
சிலையை உடைத்துக் கொண்டு இருந்த ரகுநாதனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.