செய்திகள்
பள்ளிபாளையத்தில் ரெயில் மோதி முதியவர் பலி
பள்ளிபாளையத்தில் ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயில் மோதி முதியவர் பலியானது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.