செய்திகள்
தஞ்சையில் பெண் ஊழியரை தரக்குறைவாக பேசிய முன்னாள் ராணுவவீரர் கைது
தஞ்சையில் பெண் ஊழியரை தரக்குறைவாக பேசிய முன்னாள் ராணுவவீரரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்தவர் குட்டை என்பவரது மனைவி சுமதி (வயது50). இவர் தஞ்சையிலுள்ள ராணுவ கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ராணுவ கேண்டினுக்கு சென்ற தஞ்சை பிலோமினா நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வேலாயுதம்(55) என்பவர் சுமதியிடம் மளிகை பொருள் கேட்டுள்ளார். அப்போது மேலாளர் இல்லாததால் அவருடைய ஒப்புதல் இல்லாமல் கொடுக்கக் கூடாது என சுமதி கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வேலாயுதம், சுமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுமதி தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு செய்து முன்னாள் ராணுவவீரர் வேலாயுதத்தை கைது செய்தனர்
தஞ்சையை சேர்ந்தவர் குட்டை என்பவரது மனைவி சுமதி (வயது50). இவர் தஞ்சையிலுள்ள ராணுவ கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ராணுவ கேண்டினுக்கு சென்ற தஞ்சை பிலோமினா நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வேலாயுதம்(55) என்பவர் சுமதியிடம் மளிகை பொருள் கேட்டுள்ளார். அப்போது மேலாளர் இல்லாததால் அவருடைய ஒப்புதல் இல்லாமல் கொடுக்கக் கூடாது என சுமதி கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வேலாயுதம், சுமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுமதி தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு செய்து முன்னாள் ராணுவவீரர் வேலாயுதத்தை கைது செய்தனர்