செய்திகள்
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பற்றி முகநூலில் அவதூறு பதிவு - குமரி வாலிபர் மீது வழக்கு
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பற்றி முகநூலில் அவதூறு பதிவு பரப்பிய குமரி வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருங்கல்:
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் ஆல்பர் மதியரசு (வயது 45). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் அவரை பற்றி முகநூலில் தவறான பதிவு வந்துள்ளது.
அதனை குமரி மாவட்டம் திக்கணங்கோடு மாத்திரவிளையைச் சேர்ந்தவர் நெல்சன் றோஸ் என்பவரின் மகன் நிஜின் றோஸ் (23) என்பவர் வெளியிட்டது தெரியவந்தது. அவர்மீது கருங்கல் போலீசில் ஆல்பர் மதியரசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நிஜின் றோஸ் மீது வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.