செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.40 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2021-09-15 09:39 GMT   |   Update On 2021-09-15 09:39 GMT
முத்தூர், மூலனூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்வார்கள்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலமும் வியாழக்கிழமை தோறும் சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும்.

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

முத்தூர், மூலனூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு இவற்றை கொள்முதல் செய்வார்கள். 

இந்தநிலையில் நேற்று நடந்த விற்பனையில் 115 விவசாயிகள் 43 ஆயிரத்து 958 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

இதில் 12 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.102.65 க்கும், குறைந்தபட்சம் ரூ.70 க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ. 40 லட்சத்து 47 ஆயிரத்து 920க்கு ஏலம் நடைபெற்றது.
Tags:    

Similar News