செய்திகள்
கைது

கொரோனா சிறப்பு முகாமில் துப்புரவு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்- லாரி டிரைவர் கைது

Published On 2021-09-13 11:27 GMT   |   Update On 2021-09-13 11:27 GMT
புதன்சந்தை அருகே உள்ள முத்துஉடையார்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தனபால் (35) என்பவர் துப்புரவு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 620 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் மோகனூர் சாலை அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியம் (வயது 50) மற்றும் நகராட்சி பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த புதன்சந்தை அருகே உள்ள முத்துஉடையார்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தனபால் (35) என்பவர் துப்புரவு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியம் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News