செய்திகள்
கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது

Published On 2021-09-06 04:06 GMT   |   Update On 2021-09-06 04:06 GMT
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

வேலாயுதம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 12 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News