செய்திகள்
கைது

பள்ளிப்பட்டு அருகே மணல் கடத்தல்- வாலிபர் கைது

Published On 2021-09-04 11:05 GMT   |   Update On 2021-09-04 11:05 GMT
பள்ளிப்பட்டு அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை போலீசார் நொச்சிலி கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் மணலுடன் வந்த டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை ஓட்டி வந்த மேல் நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் திருமலை (வயது 23) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரை பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News