செய்திகள்
மன்னார்குடியில் பணம் வாங்கி கொடுத்ததில் தகராறு- தொழிலாளி கைது
மன்னார்குடியில் பணம் வாங்கி கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாமரைக்குளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). தொழிலாளி. இவர், மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த வீரமணி (32) என்பவருக்கு பைனான்சில் ரூ.20 ஆயிரம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் வீரமணி பணத்தை சரிவர திரும்ப செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் செந்தில்குமாரிடம் பணத்தை கேட்டுள்ளனர். இந்தநிலையில் செந்தில்குமார், வீரமணியிடம் ஏன் பணத்தை சரியாக செலுத்தவில்லை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், வீரமணியை பிடித்து தள்ளினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி் வருகின்றனர்.