செய்திகள்
விபத்து

அரகண்டநல்லூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2021-07-15 09:50 GMT   |   Update On 2021-07-15 09:50 GMT
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரகண்டநல்லூர்: 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது29). இவர் நேற்று மாலை திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் வீ.சித்தாமூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த மினி லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News