செய்திகள்
மொபட் மீது கார் மோதல் - மீன் வியாபாரி பலி
நாசரேத்தில் கார் மோதி மீன் வியாபாரி பரிதாபமாக பலியானார்
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள மணிநகர் முனியசாமிகோவில் தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் மாசிலாமணி (வயது 70). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மாசிலாமணி நேற்று முன்தினம் இரவு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு, மொபட்டில் நாசரேத் சந்தி பஜாரில் வந்து கொண்டிருந்தார்.
நாசரேத் கதீட்ரல் ரோடு பஸ் ஸ்டாப் அருகே வரும்போது எதிரே வந்த கார் மோதியதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதுகுறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த மாசிலாமணியை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
முதலுதவி சிகிச்சைக்கு பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாசிலாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாசிலாமணியின் மகன் ஜோசப் நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.