செய்திகள்
களக்காடு அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 26). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரும், அவரது உறவினரான சுப்பையாவும், திருமண பத்திரிகை கொடுப்பதற்காக திருக்குறுங்குடி வந்தனர். அதன் பின் களக்காடு வழியாக மோட்டார் சைக்கிளில் கயத்தாறுக்கு சென்று கொண்டிருந்தனர். எஸ்.என். பள்ளிவாசல் அருகே வந்த போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி களக்காடு போலீசார் காரை ஓட்டி வந்த ஸ்ரீகிருஷ்ணன் (47) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 26). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரும், அவரது உறவினரான சுப்பையாவும், திருமண பத்திரிகை கொடுப்பதற்காக திருக்குறுங்குடி வந்தனர். அதன் பின் களக்காடு வழியாக மோட்டார் சைக்கிளில் கயத்தாறுக்கு சென்று கொண்டிருந்தனர். எஸ்.என். பள்ளிவாசல் அருகே வந்த போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி களக்காடு போலீசார் காரை ஓட்டி வந்த ஸ்ரீகிருஷ்ணன் (47) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.