செய்திகள்
அரசு பள்ளி சுவரில் துவாரம்- விஷ ஜந்துக்கள் நுழையும் அபாயம்
சுவரில் ஏற்பட்ட துவாரத்தின் வழியே தெருநாய்கள், பன்றிகள் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் அசுத்தம் செய்கின்றன.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி மற்றும் துங்காவி ஊராட்சியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியை சுற்றி மாணவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சுற்றுச்சுவரில் பெரிய அளவிலான ஓட்டை விழுந்துள்ளது. இந்த துவாரத்தின் வழியே தெரு நாய்கள், பன்றிகள் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் அசுத்தம் செய்கின்றன. மேலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பில்லாமல் சீர்குலைந்து காணப்படுகிறது.
துவாரத்தின் வழியாக விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும்.
மேலும் சிதிலமடைந்த சுவர் விழுந்து மாணவர்கள் காயமும் அடையலாம். இதனால் பழுதடைந்துள்ள அரசு பள்ளி சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.