செய்திகள்
பெட்ரோல்

நெல்லையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்வு

Published On 2021-06-26 10:00 GMT   |   Update On 2021-06-26 10:00 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது.
நெல்லை: 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே கடலூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது. நெல்லையில் நேற்று ரூ.99.19-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 31 காசுகள் உயர்ந்து ரூ.99.50-க்கு விற்பனையானது.

டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.93.25-க்கு விற்கப்பட்டது. இன்று 34 காசுகள் உயர்ந்து 93.59-க்கு விற்பனையாகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.69 பைசாவாகவும், டீசல் ஒரு லிட்டர் 93.57 பைசாவாகவும் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு விடும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News